உங்கள் கவனத்திற்கு!


Photobucket

இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே,
வலது புறம் தெரியும் 32 பாடல்கள் அடங்கிய பட்டியலில்,
நீங்கள் கேட்க விரும்பும் பாடலின் மேல் கிளிக் செய்யவும்.cloudmesa

5/10/10

கீர்த்தனை இன்பம் துய்க்க வாரீர் - பகுதி-1

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றார் ஒரு புலவர். அது
போன்று தென்னிந்திய கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் தோற்றம், ஆழ்ந்த இறையியல்
கருத்துக்கள்! பாடிய ஆசிரியர்களின் பக்திமிக்க வாழ்க்கை வரலாறு, கீர்த்தனைகளின்
பொருளுக்கேற்ற பொருத்தமான இராகத்தேர்வு!

ஒரு கீர்த்தனைக்கு பலராகங்கள் வந்த வரலாறு! ஒரே இராகத்தில் பல கீர்த்தனைகள் தோன்றிய காரணம் வந்தவிதம், போன்றவைகளை நுணுகி ஆராயும்போது, வெளிப்படும் கருத்துக்கள் தரும் இன்பத்தை சொல்லி மாளாது. மாந்தி மாந்தி அனுபவித்தால் மட்டுமே அது விளங்கும.

கிறிஸ்தவக் கீர்த்தனைகளில் தோற்றத்திற்கு காரணமே ஒரு சுவையான
நிகழ்வு ஆகும். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அனைவருமே இந்து சமயத்தில் இருந்து
ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, மணம் மாறி, மதம் மாறியவர்கள்.

மதம் மாறினாலும் இந்து சமயத்தின் கலாச்சாரம் எளிதில் விலகியபாடில்லை
இசை அறிந்தோரும், பக்திப்பாடல்களை பாடி வருவோரும், வழிபாட்டையும், இசைப்
பாடலையும் தனித்தனியாகக் கையாண்டனர்.

மேலைநாட்டுச் சமயமான கிறிஸ்தவ சமயத்தில் இறை வழிபாடும்,இசைப்
பாடலும் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக்கொண்டு களிநடம் புரிந்தது.

இந்து சமய வழிபாடு, ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும்.

இசையறிந்தோர் மட்டும் தத்தம் இஷ்ட தெய்வத்தை மனம் உருகி பாடி வழிப்பட்டனர்.

அப்போதுதான் மனம் மாறி கிறிஸ்தவ சமயத்தை தழுவியவர்க்கு பாடுவதற்கு எந்த ஒரு தமிழ் பாடலும் இல்லாதிருந்தது.

அவர்களுக்கு கைகொடுத்து மேலை நாட்டில் வழிபாட்டில் பாடப்பட்ட ஆங்கிலப் பாடல்களில்
மொழிபெயர்ப்பே அதே ராகத்தில் பாடியது கைகொடுத்தது.

பிற்காலத்தில் இசை ஞானம் கொண்ட திருச்சபை மக்களும் ஆயர் பெருமக்களும் நம்
தாய்மொழியாம் தமிழில் ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய தூய தமிழ் இசைப் பாடல்கள்
திருச்சபைகளில் ஆங்காங்கே பெருகிற்று. ஆண்டவரை போற்றி பாடப்பட்ட மொழியாக்கம்
செய்யப்பட்ட பாடல்கள் ஞானப்பாடல்கள் என்றும், தமிழிசையில் பாடப்பட்ட பாடல்கள்
கீர்த்தனைகள் என்றும் பெயர் பெற்றது.

தஞ்சையிலே வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள்
தரங்கையிலே ஞா. சாமுவேல் ஐயர் அவர்கள்
சென்னையிலே ஜி. சே. வேதநாயகம் ஐயர் அவர்கள்
சென்னையிலே பரமானந்தம் ஐயர் அவர்கள்
நாகர்கோவிலில் ஜான் பால்மர் அவர்கள்
மதுரையில் வே. சந்தியாகு ஐயர் அவர்கள்


மற்றும் நூற்றுக்கணக்காண பக்த சிரோண்மணிகளின் தேனினும் இனிய சுவை மிக்க கீர்த்தனைகளை எழுதிப் பாடி, பரமனைப் போற்றினர்.

கி.பி. 1854-ல் மதுரை வடக்கு வாசல் குருசேகர திருச்சபையில் ஆயராகப் பணிபுரிந்த வெப் ஐயர் இக்கீர்த்தனைகளின் சிறப்பை உணர்ந்து இராகத்தினால் கவரப்பட்டு, தமிழகம் எங்கும் மாட்டு வண்டியிலும், புகை வண்டியிலும், பயணித்து ஐநூறூக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளைத் தொகுத்துத் தந்தார் அந்த அமெரிக்க மிஷனரி, வெப்
ஐயர்.


தமிழறிஞர் உ. வே. சாமிநாத ஐயர் எவ்வாறு தமிழகம் எங்கும் சுற்றித்திரிந்து ஓலைச் சுவாடிகளில் கிடைத்த அரும்பாடல்களைத் தொகுத்து, நூல் வடிவில் கொண்டு வந்து காப்பாற்றினாரோ அதே போன்று, வெப் ஐயர் செய்தத் தொண்டு பெரிதும் போற்றப்பட வேண்டியது.

நூல் வடிவில் அவைகளை அச்சிட்டப்போது 400 பாமாலைகள் என்றும்
400 கீர்த்தனைகள், தொகுத்து வெளியிட்டனர்.

100 கீர்த்தனைகளை அப்போதே பதிப்பிலிருந்து விட்டுவிட்டனர்.

கீர்த்தனைகளின் சிறப்பை உணராத திருச்சபை மக்களும் பாடிய பாடல்களையே
திரும்பத் திரும்பப் பாடுவதாலும் அனைத்து கீர்த்தனைகளை அறிந்தவர்கள் மறைந்து
வருவதாலும் புத்தக வெளியீட்டார்கள் அதிகம் புழக்கம் இல்லாத கீர்த்தனைகள் என்று
அச்சிடாமல் விட்டுவிடுவதாலும் கீர்த்தனைகள் அழிவின் விளிம்பில் உள்ளது.

கரம்பங்குடி லுத்தரன் பள்ளி ஆசிரியர் சு. முத்துசாமி உபாத்தியாயர் எழுதிய ஓர்
அற்புதமான கீர்த்தனை ஒன்று உண்டு. "வேளை இது சபையே நித்திரையை விட்டு எழுந்திருக்க."

ஆம் இதுவே ஏற்ற வேளை, திருச்சபை மக்களே இனியும் நாம் தாமதித்தால் அற்புதமான கீர்த்தனைகள் அழிந்தே போய்விடும்.

T.K.C. ரசிகமணி எவ்வாறு கம்பராமாயணத்தை ஆய்ந்து அதில் எவ்வாறு இன்பம் கண்டு திழைத்தரோ அதைவிட பன்மடங்கு இன்பம் கீர்த்தனை தருவதை துய்க்க வரும்படி
அன்புடன் அழைக்கின்றேன்.

இனி வரும் இதழ்களில் இக்கீர்த்தனைகளின் தனித்தனிச் சிறப்புப் பற்றி ஆராய்ந்து இன்புற ஆண்டவர் தாமே நமக்கு அருள் செய்வாராக.
ஆமென்.
(தொடரும்)

கௌரவ உதவிகுரு அருள்திரு. S.S.P.M ஹரன்
TELC கூடல் நகர், மதுரை - 625018.
Cell:9842194671

1 comment:

தயை செய்து பாடல் பற்றின உங்கள் கருத்துக்களை கீழே ஓரிரு வார்த்தைகளிலாவது...
பதிவு செய்யுங்கள். (அ)
98421 94671 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சொல்லுங்கள்.
(அ)
உங்கள் தொலைபேசி எண்ணையோ, முழு முகவரியையோ இட்டுச் செல்லுங்கள்.
நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

அன்புடன்
அருள்திரு. S. S. P. M. ஹரன்

ஒத்த இராகத்தில் அமைந்த கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் பட்டியல்

1) சங்கராபரணம்
திரிமுதல் கிருபாசனனே
சீர்மிகு வான்புவி தேவா

சங்கராபரணம்
குணப்படு பாவி தேவ
பாக்கியர் இன்னார்
கர்த்தரின் பந்தியில் வா

சங்கராபரணம்
ஆர் இவர் ஆராரோ
சுபஜெய மங்களமே
தோத்திரப் பாத்திரனே
ஐயரே நீர் தங்கும்
அனுக்கிர வார்த்தையோடே
வாரும் பெத்லகேம் வாரும்

சங்கராபரணம்
குருசினில் தொங்கிய
திருமுகந்தெளிவற்று
வானமும், பூமியும்

சங்கராபரணம்
சத்தாய் நிஷ்களமாய்
தந்தையே இவர்க்கு மன்னி

சங்கராபரணம்
சுந்தரப் பரமதேவ
பூமியின் குடிகளே

2) ஹரி காம்போதி
ஒகோ பாவத்தினை
மகனே உன் நெஞ்சே
பரனே திருகடைக்கண் பாராயோ

ஹரி காம்போதி
இயேசுவின் நாமமே
சத்திய வேதத்தை
தேவ பிதா எந்தன் மேய்
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவர்

3) பியாகு
கண்களை ஏறெடுப்பேன்

பியாகு
கிஞ்சிதமும் நெஞ்சே
ஆத்தும ஆதாயம்
ஆண்டவர் பங்காகவே

பியாகு
வீராதி வீரர் இயேசு
யூதராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

பியாகு
எழுந்தார் இறைவன்
இவரே பெருமாள்

4) பியாக்
ஜெகநாதா குரு பரநாதா
வாரீரோ வினை திரீரோ
என் மீட்பர் உயிரோ

5) ஆனந்த பைரவி
இயேசு நாமம் ஒன்றை
பாதகன் என் வினை தீர் ஐயா
தேவனே நான் உமதண்டையில்
நம்பினேன் உனதடிமை நானய்யா
புத்தியாய் நடந்து வாருங்கள்
பரத்திலே நன்மை வருகுமே
சிந்தை செய்யும் என்னில்
இந்த மங்களம் செழிக்கவே
இன்னமும் நாம் இயேசு
அந்தகார பூமி இதையா

ஆனந்த பைரவி
ஆத்துமமே என் முழு உள்ளமே
மணவாழ்வு புது

ஆனந்த பைரவி
வாரும் பாரும் அய்யா
இம்மட்டும் ஜீவன் தந்த

6) பூரி கல்யாணி
சீர்திரி ஏகவஸ்தே நமோ
மகிழ்மகிழ் மந்தை நீ அல்லே

7) காம்போதி
பாடித்துதி மனமே
கிறிஸ்தவ இல்லறமே

காம்போதி
இயேசு கிருபாசன பதியே
வான நகரத்தின் மேன்மை
ஞானஸ்நானமா ஞானதிரவியமே

8) நாத நாமக்கிரியை
ஏங்குதே என்னகந்தான் - துயர்
பாவி நான் என்ன செய்வேன்

நாத நாமக்கிரியை
இயேசு நான் நிற்கும்
ஜெப சிந்தனை எனில் தாரும்
சரணம் நம்பினேன்

9) தன்யாசி
நன்றி செலுத்துவாயே
ஓகோ இயேசுவின்
எத்தனை திரள் என்
காலத்தின் அருமையை
அருட்கடலே வந்தரவிது

10) கமாஸ்
ஏசுநாயகனைத் துதி செய்
செய்ய வேண்டியதை சீக்கிரம் செய்

கமாஸ்
அந்த நாள் பாக்கியநான்
தேவ லோகமதில்

கமாஸ்
சித்தம் கலங்காதே பிள்ளையே
நிச்சயம் செய்குவோம்

11) முகாரி
ஐயையா நான் பாவி
ஐயையா நான் வந்தேன்
எது வேண்டும் சொல் நேசனே
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

12) காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஏசு வல்லவர்
சொல்லாரும் மெய்ஞானரே, மேன்மை
பிரபுவே
பொன்னகர் பயணம் போகும்

காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஆவியை அருளுமே ஸ்வாமி
ஏற்றுக் கொண்டருளுமே தேவா
பரிசுத்தாவி நீர் வாரும்
பொன்னகர் பயணம் போகும்

13) உசேனி
வந்து நல்வரம் தந்தனுப்பையா ஏசு
பாவியாய் எனை மேவிப்பார் ஐயா

உசேனி
வேறு ஜென்மம் வேணும்
பாதம் ஒன்றே வேணும்
நித்தம் முயல் மனமே

14) யமுனா கல்யாணி
பவனி செல்கிறார் ராஜா
ஆசையாகினேன் கோவே

15) கரஹரப்பிரியா
வரவேணும் எனதரசே
வரவேணும் பரனாவியே

16) மோகனக கல்யாணி
மேசியா ஏகநாயனார்
ஜீவ யேசு கிருபாசனா
என்னையும் உமதாட்டின்
ஓய்வு நாள் இது மனமே தேவனின்

17) மோகனம்
ஆண்டவனே கிருபை கூறாய்
சருவேசுரா ஏழைப்பாவி
உந்தன் திருப்பணியை

மோகனம்
தெய்வன்பின் வெள்ளமே
சாலேமின் ராஜா

18) யதுகுல காம்போதி
ஏசுவையே துதி செய்
கிருபை புரிந்தெனையாள்

19) சூரியகாந்தம்
துதி தங்கிய பரமண்டல
விசுவாசியின் காதில் பட
குணம் இங்கித வடிவாய்

20) செஞ்சுருட்டி
ஆர் இவர் ஆரோ
இயேசு நேசிக்கிறார்

21) பைரவி
தோத்திரம் செய்வேனே
வேளை இது சபையே
ஆ இன்பக் காலமல்லோ
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

22) கேதார கௌளம்
பணிந்து நடந்து கொண்டாரே
புண்ணியன் இவர் யாரோ
புத்தியாய் நடந்த வாருங்கள்
ஜீவ வசனங் கூறுவோம்
ஆறுதல் அடை மனமே
தேவா இரக்கம் இல்லையோ

23) சஹானா
அருமையுற நீ இறங்கி
இன்னிய முகமலர்ந்து
தந்தையே இவர்க்கு மன்னி

சஹானா
இயேசுவின் ஒதுக்கில நான்
ஒருபோதும் மறவாத

சஹானா
உனக்கு ஒத்தாசை வரும் நல்ல
இந்த குழந்தையை

24) மணிரங்கு
தீய மனதை மாற்ற
இரங்கும் இரங்கும்
அறுப்போ மிகுதி
தருணம் ஈதுன் காட்சி சால
வாரும் எமது வறுமை

25) அமிர்த கல்யாணி
எத்தனை நாவால் துதிப்பேன்
ஆவியை மழை போலே

Angels from just call me angel gif Pictures, Images and Photos