உங்கள் கவனத்திற்கு!


Photobucket

இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே,
வலது புறம் தெரியும் 32 பாடல்கள் அடங்கிய பட்டியலில்,
நீங்கள் கேட்க விரும்பும் பாடலின் மேல் கிளிக் செய்யவும்.cloudmesa

5/9/10

கீர்த்தனை இன்பம் துய்க்க வாரீர் - பகுதி- 02

பொருத்தமான இராகத் தேர்வு



கீர்த்தனை ஆசிரியர்களுக்கு ஆண்டவர் அளவற்ற ஞானத்தைக் கொடுத்திருப்பதை அவர்களின் கீர்த்தனை ஒன்றை எடுத்து ஆராயும்போது நாம் அறியலாம்.

இன்றைக்கு ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம்,
கரம்பகுடி லுத்தரன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் சு.முத்துசாமி.

அவரது அண்ணன் மகள் பொன்னுத்தாய் ஒரு பக்தியுள்ள பெண்மணி. மாலைவேளைகளில்
தனது வேதாகமத்தை எடுத்துகொண்டு, பக்கத்து வீட்டு பெண்களுக்கு வாசித்து, ஜெபித்து
வருவதே அவருடைய பணி.

நீண்டகாலம் திருமணமாகாத அந்த சகோதரிக்கு, 45 வயதில் திருமணமாகி 50 வயது
நெருங்கும்போது ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இந்த சகோதரியின்
வேதனைக்கு நாம் எதனை ஒப்பிடுவோம்?

"ஆண்டவருக்காக ஊழியம் செய்து வரும் எனக்கு, ஆண்டவர் ஏன் இந்தத் தண்டனையைக் கொடுத்தார்? நான் என்ன பாவம் செய்தேன்? என் மகள் சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன்" என்று கூறி ஓர் அறையில் புகுந்து கதவைத் தாழிட்டுக்கொண்டார்கள் அந்த மாதரசி. ஒரு நாள் அல்ல; இரண்டு நாள் அல்ல. ஐந்து நாள் வரைக்கும் யார் கதவைத் தட்டினாலும் திறக்கவில்லை.

"வாதை உந்தன் கூடாரத்தை
அனுகாது மகளே - (டும்டும்)
பொல்லாப்பு நேரிடாது
தன்னே தானே தன்னானே தானே தானன்னன்னே" என்ற பாடலை
அந்த வேளையில் பாடலாமோ! கூடாது!

காரணம் வார்த்தைகளில் வேத வசனம் இருந்தாலும், ஆறுதல் தரும் வசனத்தின்
அடிப்படையில் இருந்தாலும் பொருத்தமற்ற ராகத்தேர்வு துன்பத்தைத் தனிப்பதற்க்குப்
பதிலாக பன்மடங்கு கூட்டிவிடும். இதுவே உண்மை!

பொன்னுத்தாய் அடைத்துக்கொண்டிருந்த அறைக்கு வெளியே நின்று, கல்லும் கரையும்படி
அவரது சித்தப்பா சு. முத்துசாமி ஆசிரியர் அவர்கள் சஹானாராகத்தில் பாடிய கீர்த்தனை
இதுதான்.
"ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க.
உனக்கென்ன குறை மகளே?
சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை என்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை(ஒருபோதும்)"

எத்துணை அருமையான இராகத்தேர்வு! என்னே அவரது இசை ஞானம்!

தீப்புண்ணுக்கு மயில் இறகு கொண்டு தடவும்போது எத்தனை இதமாக இருக்குமோ
அதேபோன்று துன்பச்சூழ்நிலையில் உள்ளவருக்கு சஹானா இராகத்தில் அமைந்த இப்பாடல்
மிகவும் இதம் தரும். நமது கீர்த்தனை ஆசிரியர்கள் பாடலின் கருத்துக்கு மட்டும் இடம்
கொடுக்காமல், இரகத்தைத் தேர்வு செய்வதில் எவ்வளவு முயற்சி செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

மன உளைச்சலில் உள்ளவர்கள் ஒருமுறை இக்கீர்த்தனையைப் பாடிப் பாருங்கள், நீங்களே உணர்வீர்கள்.

உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமோ?
உறக்கமில்லாதவர் கண் உன்னைவிட்டோழியுமோ?
இந்நிலமீதினில் உனக்கென்ன வந்தாலும் சும்மா
இருக்குமா அவர் மனம்? உருக்கமில்லாது போமா? (ஒருபோதும்)
என்று பாடினார்.

இந்த வரிகளைப் பாடுகிறபொழுது, கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்த பொன்னுத்தாய்
முகம் கழுவி, வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, மீண்டும் ஊழியத்திற்குப் புறப்பட்டார்கள்.
இந்த அருமையான கீர்த்தனையை இசையோடு பாட ஒரு சில பெரியவர்களுக்கு மட்டுமே
தெரிகிறதே ஒழிய, இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும்அநேகமாகத் தெரியவில்லை.

பணத்திற்காக தன் தாலந்துகளை விற்கும் கிறிஸ்தவ ஊழியர்களின் பாட்டில் மயங்கி
உள்ளனர். இதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் தாமே இந்த அருமையான
கீர்த்தனைகளை, அனைத்து இளைஞர்களும் கற்றுக்கொள்ள ஏவுவாராக. ஆமென்.

கௌரவ உதவிகுரு. அருள்திரு. S.S.P.M ஹரன்
TELC கூடல் நகர், மதுரை - 625018.
Cell:9842194671

2 comments:

  1. ”ஒரு போதும் மறவாத உண்மைப் பிதா” பாடல் அறிந்தவர்க்கு மிகவும உற்சாகத்தை தேவையான நேரங்களில் அளிக்கவல்லது. இப்பாடலுள் பொதிந்திருக்கும் தேவ வார்த்தைகள் மனதில் உணரப்படும்போது எந்தக் கவலையும் பறந்துவிடும். நான் ஒரு நோயினால் நீண்ட காலம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது வீட்டாரே ஏளனம் செய்தனர். அப்போது இந்தப் பாடலையே நான் அடிக்கடி படித்து ஆறுதலடைவதுண்டு.

    உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமோ
    உறக்கம் இல்லாதவர்கண் உன்னை விட்டொழியுமோ

    ReplyDelete
  2. Arputha raj said...

    //”ஒரு போதும் மறவாத உண்மைப் பிதா” பாடல் அறிந்தவர்க்கு மிகவும உற்சாகத்தை தேவையான நேரங்களில் அளிக்கவல்லது. இப்பாடலுள் பொதிந்திருக்கும் தேவ வார்த்தைகள் மனதில் உணரப்படும்போது எந்தக் கவலையும் பறந்துவிடும். நான் ஒரு நோயினால் நீண்ட காலம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது வீட்டாரே ஏளனம் செய்தனர். அப்போது இந்தப் பாடலையே நான் அடிக்கடி படித்து ஆறுதலடைவதுண்டு.

    உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமோ
    உறக்கம் இல்லாதவர்கண் உன்னை விட்டொழியுமோ//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

    ReplyDelete

தயை செய்து பாடல் பற்றின உங்கள் கருத்துக்களை கீழே ஓரிரு வார்த்தைகளிலாவது...
பதிவு செய்யுங்கள். (அ)
98421 94671 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சொல்லுங்கள்.
(அ)
உங்கள் தொலைபேசி எண்ணையோ, முழு முகவரியையோ இட்டுச் செல்லுங்கள்.
நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

அன்புடன்
அருள்திரு. S. S. P. M. ஹரன்

ஒத்த இராகத்தில் அமைந்த கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் பட்டியல்

1) சங்கராபரணம்
திரிமுதல் கிருபாசனனே
சீர்மிகு வான்புவி தேவா

சங்கராபரணம்
குணப்படு பாவி தேவ
பாக்கியர் இன்னார்
கர்த்தரின் பந்தியில் வா

சங்கராபரணம்
ஆர் இவர் ஆராரோ
சுபஜெய மங்களமே
தோத்திரப் பாத்திரனே
ஐயரே நீர் தங்கும்
அனுக்கிர வார்த்தையோடே
வாரும் பெத்லகேம் வாரும்

சங்கராபரணம்
குருசினில் தொங்கிய
திருமுகந்தெளிவற்று
வானமும், பூமியும்

சங்கராபரணம்
சத்தாய் நிஷ்களமாய்
தந்தையே இவர்க்கு மன்னி

சங்கராபரணம்
சுந்தரப் பரமதேவ
பூமியின் குடிகளே

2) ஹரி காம்போதி
ஒகோ பாவத்தினை
மகனே உன் நெஞ்சே
பரனே திருகடைக்கண் பாராயோ

ஹரி காம்போதி
இயேசுவின் நாமமே
சத்திய வேதத்தை
தேவ பிதா எந்தன் மேய்
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவர்

3) பியாகு
கண்களை ஏறெடுப்பேன்

பியாகு
கிஞ்சிதமும் நெஞ்சே
ஆத்தும ஆதாயம்
ஆண்டவர் பங்காகவே

பியாகு
வீராதி வீரர் இயேசு
யூதராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

பியாகு
எழுந்தார் இறைவன்
இவரே பெருமாள்

4) பியாக்
ஜெகநாதா குரு பரநாதா
வாரீரோ வினை திரீரோ
என் மீட்பர் உயிரோ

5) ஆனந்த பைரவி
இயேசு நாமம் ஒன்றை
பாதகன் என் வினை தீர் ஐயா
தேவனே நான் உமதண்டையில்
நம்பினேன் உனதடிமை நானய்யா
புத்தியாய் நடந்து வாருங்கள்
பரத்திலே நன்மை வருகுமே
சிந்தை செய்யும் என்னில்
இந்த மங்களம் செழிக்கவே
இன்னமும் நாம் இயேசு
அந்தகார பூமி இதையா

ஆனந்த பைரவி
ஆத்துமமே என் முழு உள்ளமே
மணவாழ்வு புது

ஆனந்த பைரவி
வாரும் பாரும் அய்யா
இம்மட்டும் ஜீவன் தந்த

6) பூரி கல்யாணி
சீர்திரி ஏகவஸ்தே நமோ
மகிழ்மகிழ் மந்தை நீ அல்லே

7) காம்போதி
பாடித்துதி மனமே
கிறிஸ்தவ இல்லறமே

காம்போதி
இயேசு கிருபாசன பதியே
வான நகரத்தின் மேன்மை
ஞானஸ்நானமா ஞானதிரவியமே

8) நாத நாமக்கிரியை
ஏங்குதே என்னகந்தான் - துயர்
பாவி நான் என்ன செய்வேன்

நாத நாமக்கிரியை
இயேசு நான் நிற்கும்
ஜெப சிந்தனை எனில் தாரும்
சரணம் நம்பினேன்

9) தன்யாசி
நன்றி செலுத்துவாயே
ஓகோ இயேசுவின்
எத்தனை திரள் என்
காலத்தின் அருமையை
அருட்கடலே வந்தரவிது

10) கமாஸ்
ஏசுநாயகனைத் துதி செய்
செய்ய வேண்டியதை சீக்கிரம் செய்

கமாஸ்
அந்த நாள் பாக்கியநான்
தேவ லோகமதில்

கமாஸ்
சித்தம் கலங்காதே பிள்ளையே
நிச்சயம் செய்குவோம்

11) முகாரி
ஐயையா நான் பாவி
ஐயையா நான் வந்தேன்
எது வேண்டும் சொல் நேசனே
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

12) காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஏசு வல்லவர்
சொல்லாரும் மெய்ஞானரே, மேன்மை
பிரபுவே
பொன்னகர் பயணம் போகும்

காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஆவியை அருளுமே ஸ்வாமி
ஏற்றுக் கொண்டருளுமே தேவா
பரிசுத்தாவி நீர் வாரும்
பொன்னகர் பயணம் போகும்

13) உசேனி
வந்து நல்வரம் தந்தனுப்பையா ஏசு
பாவியாய் எனை மேவிப்பார் ஐயா

உசேனி
வேறு ஜென்மம் வேணும்
பாதம் ஒன்றே வேணும்
நித்தம் முயல் மனமே

14) யமுனா கல்யாணி
பவனி செல்கிறார் ராஜா
ஆசையாகினேன் கோவே

15) கரஹரப்பிரியா
வரவேணும் எனதரசே
வரவேணும் பரனாவியே

16) மோகனக கல்யாணி
மேசியா ஏகநாயனார்
ஜீவ யேசு கிருபாசனா
என்னையும் உமதாட்டின்
ஓய்வு நாள் இது மனமே தேவனின்

17) மோகனம்
ஆண்டவனே கிருபை கூறாய்
சருவேசுரா ஏழைப்பாவி
உந்தன் திருப்பணியை

மோகனம்
தெய்வன்பின் வெள்ளமே
சாலேமின் ராஜா

18) யதுகுல காம்போதி
ஏசுவையே துதி செய்
கிருபை புரிந்தெனையாள்

19) சூரியகாந்தம்
துதி தங்கிய பரமண்டல
விசுவாசியின் காதில் பட
குணம் இங்கித வடிவாய்

20) செஞ்சுருட்டி
ஆர் இவர் ஆரோ
இயேசு நேசிக்கிறார்

21) பைரவி
தோத்திரம் செய்வேனே
வேளை இது சபையே
ஆ இன்பக் காலமல்லோ
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

22) கேதார கௌளம்
பணிந்து நடந்து கொண்டாரே
புண்ணியன் இவர் யாரோ
புத்தியாய் நடந்த வாருங்கள்
ஜீவ வசனங் கூறுவோம்
ஆறுதல் அடை மனமே
தேவா இரக்கம் இல்லையோ

23) சஹானா
அருமையுற நீ இறங்கி
இன்னிய முகமலர்ந்து
தந்தையே இவர்க்கு மன்னி

சஹானா
இயேசுவின் ஒதுக்கில நான்
ஒருபோதும் மறவாத

சஹானா
உனக்கு ஒத்தாசை வரும் நல்ல
இந்த குழந்தையை

24) மணிரங்கு
தீய மனதை மாற்ற
இரங்கும் இரங்கும்
அறுப்போ மிகுதி
தருணம் ஈதுன் காட்சி சால
வாரும் எமது வறுமை

25) அமிர்த கல்யாணி
எத்தனை நாவால் துதிப்பேன்
ஆவியை மழை போலே

Angels from just call me angel gif Pictures, Images and Photos